சென்னை: ஆந்திர மாநில மதுக்கடைகளில், அம்மாநில ஆதார் கார்டுக்கு உள்ளவர்களுக்கே மது விற்கப்படும் என்பதால், குடிமகன்கள் குஷியாக வாங்கிச்சென்றனர். இதனால் எல்லைதாண்டி ஆந்திரா சென்ற தமிழக குடிமகன்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் நாகலாபுரத்தில் 2 டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளன. இந்த கடைகளில் நேற்று ஆந்திர மாநில குடிமகன்கள் மது வாங்க காலை 9 மணி முதலே காத்துக்கிடந்தனர். ஆனால், கடை 11 மணிக்கு திறக்கப்பட்டது. குடிமகன்கள் கடை முன் போட்டிபோட்டு மது வாங்க முயன்றனர். அப்போது, கடை திறந்தவுடன் விற்பனையாளர்கள் ஆதார் கார்டு மற்றும் உள்ளூர் பிரமுகர்களுக்கு மட்டும்தான் சரக்கு வழங்கப்படும் என்றனர்.