சென்னை: சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வந்த போலி சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதித்துறை இயக்குநர் கணேசன் போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனை சந்தித்து போலி சித்த மருத்துவர் குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக பரப்பிய தவறான தகவல்களால் பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட போலி சித்த மருத்துவர் மீது உரிய நடவக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.