ஈரோடு: ஈரோட்டில் மதுக்கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டத்தை முன் எடுத்தனர். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் மூன்றாவது மண்டலத்துக்கு உள்பட்ட மாதேஸ்வரன் மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.