சென்னை: சென்னையில் இன்று முதல் அனைத்து தனிக்கடைகளும் இயங்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் மே 17 வரை தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தனி கடைகள் இயங்க அனுமதி வழங்கியது. நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் இயங்கலாம். ஆனால், ஏசி பொருத்தப்பட்ட நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள், ஆகியவை இயங்க அனுமதியில்லை என தெரிவித்திருந்தது. இதனால் ஏசி வசதி இல்லாத கடைகள் மட்டுமே இயங்க முடியும்.