ஊத்துக்கோட்டை: கோயம்பேட்டில் காய்கறி கடை உரிமையாளர்கள், டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள் என பெரும்பாலானவர்களுக்கு கொரோனா பரவியது.இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேட்டிற்கு சென்று காய்கறி வாங்கி வந்த காய்கறி கடைக்காரர்கள் மற்றும் வேன் டிரைவர்கள் என 27 பேருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் தலைமையில் கொரோனா பரிசோதனை செய்தனர்.