கொடைக்கானல்: கொடைக்கானலுக்கு புதிதாக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வரத்துவங்கியுள்ளன.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஏரி, கொடைக்கானல் பழைய நீர்த்தேக்கம் ஆகிய பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன. இந்த பறவைகள் கோடை காலமான இந்த காலத்தில் மற்ற பகுதிகளில் வறண்ட சூழ்நிலை நிலவும் காரணத்தால் கொடைக்கானலுக்கு வந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்களும், பறவைகள் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் இந்த பறவைகள் கொடைக்கானலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.