சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தப்பட்டு மீண்டும் கட்டணம் வசூலிக்க தொடங்கியதால் ஏழை எளிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏப்ரல் 22-ம் தேதி முதல் இலவசமாக அம்மா உணவகங்களுக்கு வருவோருக்கு உணவு கொடுக்கப்பட்டு வந்தது. மத்திய மாநில அரசுகள் இணைந்து சில தளர்வுகளை கொடுத்தாலும், சென்னையில் மட்டும் கடந்த 22-ம் தேதி முதல் நேற்று வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கினார்கள். ஆனால் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இங்கு உணவு சாப்பிட வரும் சாமானிய கூலி தொழில் செய்யக்கூடியவர்கள், கட்டட வேலை செய்யகூடியவர்கள், பேயின்ட் வேலை செய்யக்கூடியவர்கள் என எளிய ஏழை மக்கள் தான் இந்த அம்மா உணவகத்தில் பயன்பெற்று வந்தார்கள்.