துரைப்பாக்கம்: திருவான்மியூர் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்த 63 வயது வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், இவர் சென்று வந்த இடங்கள், இவருடன் தொடர்பில் இருந்த நபர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகின்றனர். பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து திருவான்மியூர் மார்க்கெட்டிற்கு காய்கறிகளை லாரிகள் மூலம் கொண்டு வந்து இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். எனவே, இவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.