ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்; 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் ஹந்த்வாராவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாராவில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்தனர். அந்த பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் திடீரென  துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனை தொடர்ந்து பதிலடி தரும்வகையில் பாதுகாப்பு படையினரும் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், கர்னல், 2 ராணுவ வீரர்கள் உட்பட 4 பேர் வீரமரணமடைந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். நேற்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள தங்கர் போரா  பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: