திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி: தற்போது நாம், நெருக்கடியான முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம். தொழில்களை முடக்க வேண்டும் என்பது அரசின் நோக்கமல்ல. தொழிலை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். மனிதன் உயிரோடு இருப்பது முக்கியம். ஆகவே பொதுமக்களின் உயிரைக்காப்பதுதான் அரசின் தலையாய கடமை.விசைத்தறி உரிமையாளர்கள தங்கள் பிரச்னைகளைத் தீர்க்குமாறு கூறினர். நானும் இந்த தொழிலில் இருப்பவன்தான்.