காய்கறி வியாபாரிக்கு கொரோனா உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான 9 பேர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்நிலையில் மாங்காடு மெயின் ரோட்டை சேர்ந்த காய்கறி வியாபாரிக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன் சளி, காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, காய்கறி வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து அவர், தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

மேலும் அவரது மனைவி, மகன் ஆகியோர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் வசித்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர் 1,  பாதிக்கப்பட்டவர்கள் 20 பேர்,  சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 10 என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: