கொரோனாவில் இருந்து மீண்டது ஈரோடு மாவட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாய்லாந்து நாட்டினர் 2 பேருக்கு கடந்த மாதம் 16ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின், அவர்களின் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் என எண்ணிக்கை அதிகரித்தது. இதன்படி, மொத்தம் 70 பேர் பாதிக்கப்பட்டனர். 65 பேர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 பேர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பெருந்துறையை சேர்ந்த முதியவர் ஒருவர், உயிரிழந்த நிலையில் மற்ற அனைவரும் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதையடுத்து ஈரோடு மாவட்டம் கொரோனாவில் இருந்து மீண்டது.  இதனால், கொரோனா பாதிப்பில் இருந்து தமிழகத்தில் முதலாவதாக ஈரோடு மாவட்டம் மீண்டது என்ற பெயரை பெற்றுள்ளது.

Related Stories: