வேலூர்: வேலூர் துணை மின் நிலையமான சேண்பாக்கத்தில் இருந்து கொணவட்டம், சார்பனாமேடு, தொரப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 8 மணியளவில் துணை மின்நிலையத்தில் 2 பூனைகள் சண்டையிட்டுள்ளது. அப்போது அவை அங்குள்ள பிரேக்கர்கள் மீது விழுந்தது. இதனால் பிரேக்கர் பீடர்கள் திடீரென வெடித்தது. இதில் ஒரு பூனை இறந்தது. இதனால் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முழுவதுமாக மின் தடை ஏற்பட்டது.