அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே பொய்யூர் கிராமத்தில் உள்ள இருளர் சமூகத்தினருக்கு அப்பகுதி கிராம இளைஞர்கள் நிவாரணப் பொருட்களை வழங்கினர். ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பகுதி இளைஞர் குழுவினர் நிவாரணப் பொருட்களை அப்படியே வழங்காமல், பாரம்பரிய முறைப்படி, தாம்பூலத்தில் வெற்றிலைப் பாக்குடன், அரிசி, பருப்பு, எண்ணெய், மஞ்சள்தூள், மிளகாய்தூள், கடுகு உட்பட குடும்பத்துக்கு தேவையான காய்கறிகளையும் வைத்து வழங்கினர்.