சென்னை: கொரோனா தொற்று பரவாமலிருக்க பயன்படுத்தப்படும் முகக்கவசம் (மாஸ்க்) மற்றும் சானிடைசர் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டியை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் எஸ்.ஸ்டாலின் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை சுமார் 700 பேரை பலி வாங்கியுள்ளது. தமிழகத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மாஸ்க், சானிடைசர்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
- ஜிஎஸ்டி
- முகமூடி மற்றும் சுத்திகரிப்பாளர்கள்: விசாரணை
- கனிடிகர்கல்
- கேட்டு
- ஜிஎஸ்டி வழக்கு: உயர் நீதிமன்றம்