கோவை: கோவை மாவட்டத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்ட நிலையில், கள்ளச்சாராயம் மற்றும் ‘கள்’ விற்பனை அதிகரித்துள்ளது. தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, மதுக்கரை, கோவில்பாளையம், அன்னூர், சூலூர், கருமத்தம்பட்டி வட்டாரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுகிறது. மதுபான கடைகள் பயன்பாட்டில் இருந்தபோது ஒரு லிட்டர் ‘கள்’ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது, தற்போது ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ‘கள்’ வாங்க ‘குடி’மகன்கள் தென்னந்தோப்புகளில் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். மரங்களில் ஏறி, அத்துமீறி ‘கள்’ இறக்கிவிடாமல் இருக்க தென்னந்தோப்புகளில் காவல் போடப்பட்டுள்ளது. சில தென்னந்தோப்புகளில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது.