ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகள் உள்ளன. தற்போது கிராம ஊராட்சி பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குன்றத்தூர் ஒன்றியம் ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பு, பிளீச்சிங் பவுடர் தெளிப்பு, முககவசம், கையுறை அணிவது மற்றும் கை சுத்தமாக வைத்துக்கொள்வது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியம் சாலமங்கலம் ஊராட்சி லட்சுமி நகரை சேர்ந்த 30 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.