சென்னை: அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் மற்றும் தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு சிகிச்சை அளித்த 55 வயது டாக்டருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மரணமடைந்தார். அவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மயானத்திற்கு மருத்துவ ஊழியர்களும், சுகாதார பணியாளர்களும், போலீசாரும் ஆம்புலன்சில் எடுத்து சென்றுள்ளனர்.