காஞ்சிபுரம்: இந்திய தேசிய கிராமத் தொழிலாளர் சம்மேளன காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன், முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது. கொரோனா தொற்று காரணமாக தொழிலாளர் நலவாரிய அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் உறுப்பினராக உள்ள தொழிலாளர்கள், தங்கள் பதிவினை புதுப்பிக்க முடியாமல் உள்ளது. எனவே, பதிவினை புதுப்பிக்கத் தவறினாலும், நலவாரிய உறுப்பினர் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் கொரோனா நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.