ஆம்பூர்: கொரோனா வைரஸ் பரவி தற்போது உலகம் முழுவதும் உயிர்பலி எண்ணிக்கையும், நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு மாநில மற்றும் மாவட்ட எல்லைகளை மூடி உள்ளது. அந்த இடங்களில் போலீசார் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை, ரயில், விமான சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிக்கி உள்ளவர்கள் நடந்தே மூட்டை முடிச்சுகளுடன் தங்களது ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர். மாநில எல்லைகளை கடந்து செல்ல கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால் தற்போது தமிழக- ஆந்திர பகுதிகளை சேர்ந்தவர்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் ஒத்தையடி பாதைகளை கண்டுபிடித்து ஆபத்தை உணராமல் செல்கின்றனர்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி ஆபத்தை உணராமல் காட்டுப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள்: தடுக்க முடியாமல் தமிழக- ஆந்திர போலீசார் தவிப்பு
- பொதுமக்கள்
- வனப்பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்களின் மீறல் தொடர்பான தமிழ்நாடு-ஆந்திர பொலிஸ் முடிசூட்டு விதிமுறைகள்
- கொரோனா
- ஆந்திர போலீஸ்