புதுடில்லி: சோப்பு, மாஸ்க், சானிடைசர், கையுறைக்கு ஜி.எஸ்.டி., வசூலிக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது; கொரோனா தொற்று பரவி வரும் இந்த கடினமான நேரத்தில் அதற்கு சிகிச்சை அளிக்கும சிறிய, பெரிய உபகரணங்கள் அனைத்துக்கும் ஜி.எஸ்.டி. வசூலிக்கக்கூடாது என அரசிடம் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் துப்புறவாளர்களிடம் சோப்புகள், மாஸ்க்குகள், கையுறைகள் போன்றவற்றிற்கு ஜி.எஸ்.டி., வசூலிப்பது தவறானது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் #GSTFreeCorona என்ற ஹேஷ்டேக்கையும் உருவாக்கி உள்ளார். இந்த பொருட்களின் மீதான ஜிஎஸ்டி கட்டணங்கள், மார்ச் 25’ஆம் தேதி இந்தியா முதன்முதலில் ஊரடங்கை தொடங்கியதிலிருந்து இவை அனைத்திற்கும் தேவை அதிகரித்துள்ளது.