அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 26ம் தேதி, உடல் நிலை சரியில்லாமல் 50 வயது மதிக்கத்தக்கவர் மயங்கி விழுந்தார். கோயம்பேடு போலீசார், அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரணையில், இறந்தவர் பெயர் சங்கர் என்பதும், கோயம்பேடு மார்க்கெட்டில் தங்கி, கூலி வேலை செய்தவர் என்பதும், இவரது மகன் கொடுங்கையூரில் வசிப்பதும் தெரியவந்தது. போலீசார் கொடுங்கையூரில் உள்ள முதியவரின் மகன் நந்தக்குமாரை தொடர்புகொண்டு, ‘‘உங்களுடைய தந்தை சங்கர், இறந்து விட்டார். கீழ்ப்பாக்கம் அரக மருத்துவமனையில் அவரது உடல் உள்ளது’’ என கூறினர்.