கொடைக்கானல்: கொடைக்கானலில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த வண்ண மை பூசப்பட்டது.கொடைக்கானல் நகர் பகுதிகளில் 144 தடை உத்தரவை மீறி நாள்தோறும் வாகன போக்குவரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. போலீசார் சோதனை செய்தால் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வதாகக் கூறி சென்று வருகின்றனர். இதை முறைப்படுத்தி கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வண்ண மை பூசும் பணியை நேற்று தொடங்கினர். முதல் தடவை பிடிபடும் வாகனத்தில் மஞ்சள் மை பூசப்பட்டு எச்சரித்து அனுப்பப்படும். இரண்டாம் முறை இந்த வாகனங்கள் தணிக்கையில் ஈடுபடும் போலீசாரிடம் சிக்கினால் நீலக்கலர் பூசப்படும். அடுத்த முறை இந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.