சென்னை: தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானியலையே நிலவும்.
தமிழகத்தில் தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
- மழை
- நெல்லை
- விருதுநகர்
- பிறகு நான்
- மாவட்டங்களில்
- தூத்துக்குடி
- குமாரி
- வானிலை மையம்
- ரெய்னி
- குமாரி மாவட்டங்கள்