பொள்ளாச்சி அருகே பிரசவித்த பெண்ணுக்கு கொரோனா உறுதி

கோவை: பொள்ளாச்சி அருகே காளியாபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 12-ம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. பெண்ணிடம் எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அவரது குழந்தை கோவை ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: