அருப்புக்கோட்டை: உலக மக்கள் கொரோனா தொற்றிலிருந்து விடுபட அருப்புக்கோட்டையைச் சேர்ந்த யோகா பயிற்றுநர் ஆணி படுக்கையின் மேல் தினமும் 90 நிமிடம் யோகா மூலம் பிரார்த்தனை செய்கிறார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் யோகா பயிற்றுநர் ராஜகோபால். உலக மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி தினமும் 90 நிமிடங்கள் ஆணி படுக்கையின் மேல் அமர்ந்து உத்தன தண்டாசனம், உத்தனபாத தவிராசனம், உத்தனபாத கோகிலவாம தேவாசனம், உத்தமபாத அர்த்த யோகராஜக போட்டாசனம் ஆகியவற்றை செய்கின்றார்.