பெரியகுளம்: தமிழக அரசின் உத்தரவை அறியாமல், பெரியகுளத்தில் திறக்கப்பட்ட கிருமிநாசினி சுரங்கப்பாதையை, அரை மணி நேரத்தில் மூடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் மருத்துவமனை, காய்கறி மார்க்கெட்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகமாக வரும் இடங்களில் கிருமிநாசினி சுரங்கப்பாதை அமைத்து வந்தனர். பொதுமக்கள் மீது கிருமிநாசினி தெளிப்பதால், அவர்களுக்கு பல்வேறு சருமப்பிரச்னை உருவாவதாக கூறி, தமிழகத்தில் கிருமிநாசினி சுரங்கப்பாதை திறக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துணை முதல்வரின் சொந்த ஊரில் அரசு அறிவிப்பு மீறல்: திறந்த அரை மணி நேரத்தில் கிருமிநாசினி சுரங்கப்பாதை மூடல்
- துணை முதல்வரின் சொந்த ஊர்: கிருமி நீக்கம் சுரங்கப்பாதை மூடல்
- அரை மணி நேரம் திறக்கவும்
- சொந்த ஊரான
- துணை முதலமைச்சர்
- மூடல்
- கிருமிநாசினி சுரங்கம்