வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: கடலோர காவல் படையினர் விசாரணை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் செல்லக்கன்னி வாய்க்கால் பகுதியில் கவிழ்ந்த நிலையில் ஒரு பைபர் படகு மிதந்து வந்தது. இதனைக்கண்ட அங்குள்ள மீனவர்கள் கோடியக்கரை சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சுங்க இலாகா அதிகாரி சண்முகசுந்தரம் தலைமையில் மீனவர்கள் சென்று அந்த படகை கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் டிராக்டர் உதவியுடன் படகை சுங்க இலாகா அலுவலகத்திற்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த படகு இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த படகு ஆகும். படகில் கஞ்சா பொருட்கள் கடத்தி சென்றபோது படகு கவிழ்ந்ததா என்ற கோணத்தில் சுங்க இலாகாவினர், கடலோர காவல் படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். …

The post வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: கடலோர காவல் படையினர் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: