சென்னை: சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாமாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னை துறைமுகத்தில் இருந்து மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் எண்ணெய் நிறுவனத்துக்கு சுமார் 20,000 லிட்டர் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி இன்று மதியம் 2.30 மணி அளவில் புறப்பட்டது. சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து கீழே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி கீழே கவிழ்ந்தது. இதில் டேங்கர் லாரியில் இருந்த பாமாயில் சாலையில் ஓடியது. மேலும் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர்.