சென்னை: ஆலன் கல்வி நிறுவனம் கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமரின் கேர்ஸ் நிதிக்கு ₹51 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. நாடு முழுவதும் 12 மாநிலங்களில் உள்ள 25 ஆலன் ஆய்வு மையங்களின் குழு உறுப்பினர்கள் இதில் பங்களிப்பு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்காக ஆலன் நிறுவனம் இதுவரை ₹92 லட்சம் நன்கொடை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்று ஆலன் இயக்குனர் எஸ்.ராஜேஷ் மகேஸ்வரி தெரிவித்தார். கொரோனா தடுப்பு பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், ஆலன் கல்வி நிறுவனம் தங்களது பங்களிப்பை செலுத்தும் வகையில் நிதி உதவி வழங்கியுள்ளது.