கொரோனா கொடுத்த ஓய்வில் சுயசரிதை எழுதுகிறார் சிரஞ்சீவி

சென்னை:  தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘‘ஆச்சார்யா என்ற படத்தில், அவரது ஜோடியாக ஒப்பந்தமானார் திரிஷா. திடீரென்று படத்தில் இருந்து விலகிய அவர், படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே தான் விலக நேரிட்டது என்றும், விரைவில் ேவறொரு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை சந்திப்பதாகவும் பதிவு வெளியிட்டார்.  இந்நிலையில் ஐதராபாத்தில் பேட்டி அளித்த சிரஞ்சீவியிடம், திரிஷா குற்றச்சாட்டு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:

திரிஷா ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. அவர் வருத்தப்படும்படி யாராவது ஏதாவது சொன்னீர்களா என்று படக்குழுவினரிடம் கேட்டேன். அவர்கள், அப்படி எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தனர். தற்போது மணிரத்னம் இயக்கும் ‘‘பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடிக்கிறார் என்றும், அந்த படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் தேவைப்படுகிறது என்றும், அதனால்தான் என் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்றும் பிறகு தெரிந்துகொண்டேன்.

தற்போது கொரோனா பரவல் தொடர்பான விஷயங்களை கவனித்து வருகிறேன். அதேவேளையில் சமூக வலைத்தளத்தில் விறுவிறுப்பாக இயங்குகிறேன். கிடைத்த ஓய்வில் நிறைய படங்கள் பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு வந்து, அதுபற்றிய குறிப்புகளை சேகரித்து வருகிறேன். விரைவில் என் சுயசரிதையை ஒலி வடிவிலும், புத்தக வடிவிலும் கொண்டு வருவேன். இவ்வாறு கூறினார்.

Related Stories: