சென்னை: கன்னட நடிகை ராஷ்மி கோபிநாத், தமிழில் ‘‘காக்டெய்ல் படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், வீட்டிலேயே மாஸ்க் தயாரிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் கொடூரமான தொற்றுநோய் என்பதால், தயவுசெய்து அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். பொறுப்பில்லாமல் வெளியில் சுற்ற வேண்டாம். பொழுதுபோக்குக்காக நண்பர்களுடன் அரட்டையடிக்கவும், பார்ட்டிக்கு செல்லவும் உங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லவும் வேண்டாம். அப்படி செய்தால், கொரோனா வைரஸ் பரவி அனைவரையும் கடுமையாக பாதிக்கும். அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்.