சென்னை: சென்னை முழுவதும் மாஞ்சா நூலில் பட்டம் விடுவதற்கு போலீசார் தடைவித்துள்ளனர். மீறினால், குண்டர் சட்டம் பாயும் என்று போலீஸ் கமிஷனர் ஏ,கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனாலும், அதை மீறி பல இடங்களில் மஞ்சா நூலில் பட்டம் விடப்படுகிறது. தற்போது, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பலர் வீட்டின் மொட்டை மாடியில் மஞ்சா நூலில் பட்டம் விடும் சம்பவம் நடந்து வருகிறது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, பார்த்தசாரதி பிள்ளை தெருவை சேர்ந்தவர் புவனேஷ் (25). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.