ஆலந்தூர்: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ரிஸ்வான் (24). இவர், நேற்று முன்தினம் தனது நண்பர்களான சந்தோஷ், டேவிட், விமல்ராஜ், உதயா, சூர்யா, ஸ்டாலின் ஆகியோருடன் பழவந்தாங்கல் கல்குவாரி குட்டை அருகே அமரந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டபடி அங்கு ஓடிவந்துள்ளனர். போலீசார் தான் அங்கு வருவதாக கருதிய இவர்கள் அனைவரும் தப்பிக்க கல்குவாரி குட்டையில் குதித்துள்ளனர்.