தேவகோட்டை: கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன், தனது செலவில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு காய்கறிகள் அடங்கிய பை வழங்கி வருகிறார். சுமார் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய பை கொடுக்கும் பணி நடந்து வருகின்றது.