சென்னை: கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தும் பணிக்காக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று தென்னக ரயில்வே சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ரயில் பெட்டிகளை தனிவார்டாக மாற்றுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை ஏற்பட்ட பிறகே ரயில்பெட்டிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தது.