சென்னை : ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய 525 தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளை தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு அறிவித்தது.