சென்னை: தமிழகத்துக்கு ஏன் அதிக நிதியை ஒதுக்கவில்லை என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு 2 வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ள நிலையில் குறைவான நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.510 கோடி போதுமானதாக இருக்காது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.