விலங்குகளின் நடத்தை பற்றி அறிந்த நிபுணர்கள், `நாடு முழுவதுமான ஊரடங்கினால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், தெரு நாய்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்கும் போது அவை ஒன்றை ஒன்று தாக்கி கொள்கின்றன. தெரு நாய்களை பொருத்தமட்டில் கிடைப்பதை சாப்பிடும் பழக்கம் உடையவை. வேட்டையாடுபவை அல்ல. மார்க்கெட் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றி திரியும் நாய்கள், எப்போதும் மனிதர்களுடன் தொடர்பு உடையவையாக இருக்கும். யாராவது ஒருவர் மூலம் உணவு கிடைத்து விடும். தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் சாலைகளில் மனிதர்களின் நடமாட்டத்தை காண முடியாததால் குழம்பி போய் உள்ளன.