சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தாமாகவே முன்வந்து மருத்துவமனையை அணுகும் ஒரு சுமூகமான சூழலை அரசு உருவாக்க வேண்டும். இந்த நிலையில், அதற்கு நேர் மாற்றமாக நடைபெறும் நிகழ்வுகள் காரணமாக சில இடங்களில் மக்களின் அச்சம் காரணமாக பிரச்னைகள் உருவாகின்றன. தமிழக அரசும் சுகாதாரத்துறையும் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா அச்சத்தில் உறைந்து போயிருக்கும் மக்களிடம் காட்டப்படும் கடுமைகளும், பலவந்தங்களுமே இத்தகைய பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகும்.