மூணாறு: மூணாறு அருகே 1,300 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் கைப்பற்றினர். ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கடந்த 24ம் தேதி முதல் கேரள அரசின் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. 21 நாள் ஊரடங்கு முடியும் வரை மதுபான கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இடுக்கி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை களை கட்ட துவங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மூணாறு அருகே உள்ள குமுளி ஆறாம் மைல் பகுதியில் 2 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம், ராஜகுமாரி பகுதியில் 330 லிட்டர் கள்ளச்சாராயம் மூணாறு எல்லப்பட்டி எஸ்டேட் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கள்ளச்சாராயத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மூணாறு அருகே அமைந்துள்ள ராமாக்கல் மெட்டு வியூ பாயிண்ட் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.