திருவள்ளூரில் கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்படும்: ஆட்சியர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகங்களை தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். நகராட்சி, கிராம வார்டு குழுக்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுள்ளவர்கள் இருந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது என ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Related Stories: