சென்னை: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய மற்றும் முக்கியமான செயல்பாடுகள் எவ்விதமான இடையூறுமின்றி இயங்கி வருகிறது. இதற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மக்களுக்கு கிடைக்க வேண்டியது என்பதே காரணமாகும். குறிப்பாக மருத்துவ வசதிகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை வசதி சுகாதாரமான முறையில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.