பூந்தமல்லி: வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், குறிஞ்சி நகர் 4வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் (45). இவர் அதே பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார். மேலும், பல்வேறு கடைகளுக்கு மருந்துகள் சப்ளை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு கடைக்கு மருந்துகள் சப்ளை செய்துவிட்டு இரவு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். திருமழிசை கூட்டு சாலை, நசரத்பேட்டை அருகே வந்தபோது திடீரென சாலையை கடந்த மாட்டின் மீது எதிர்பாரத விதமாக பைக் மோதியது.