சென்னை: நாட்டின் மிகப்பெரிய கடனுதவி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 2,56,000 ஊழியர்கள் தங்களது 2 நாள் சம்பள தொகையான ₹100 கோடியை, கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். மேலும், வங்கி நிர்வாகம் தனது சமூக பொறுப்புணர்வு சார்ந்த செயல்பாடுகளில் ஒரு பகுதியாக 2019-20 நிதியாண்டின் லாபத்தில் 0.25 சதவீதத்தை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ்குமார் கூறுகையில், ‘‘எஸ்பிஐ ஊழியர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து தங்களது 2 நாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்காக பிரதமரின் (பி.எம் கேர்) நிதிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.