போபால் : மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா பரிசோதனை பணியில் ஈடுபட்டு இருந்த மருத்துவ பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரமாக இந்தூர் மாறியுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பதிப்புகளில் 4ல் 3 பங்கு இந்தூரில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த நகரில் கொரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்தூரில், புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து, சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.