சென்னை: தமிழகம், புதுச்சேரி எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் வெளியிட்ட அறிவிப்பு: பெட்ரோல் பங்கு முகவர்கள், ஊழியர்கள், எல்.பி.ஜி மெக்கானிக், டிரக் டிரைவர்ஸ் என மக்களிடம் எரிபொருள் மற்றும் எண்ணெய்யை கொண்டு செல்ல உழைப்பவர்கள் யாரேனும் கொரோனாவால் இறந்தால், அவர்களின் குடும்பத்தாருக்கு ₹5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.மேலும், மக்கள் எங்கே சிலிண்டர்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற நோக்கத்தில் அவசர அசவரமாக சிலிண்டரை பதிவு செய்கின்றனர். காஸ் நிறுவனங்கள் முழு நேரமும் இயங்கி கொண்டு இருக்கிறது. எனவே யாரும் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டாம். மாநிலம் முழுவதும் 1.3 கோடி பேர் இந்தியன் ஆயில் காஸ் பயண்படுத்துகின்றனர். அதில், ஒரு நாளைக்கு 2.2 லட்சம் பேர் உபயோகின்றனர்.