சென்னை: பிரதமரின் நிவாரண நிதிக்கு 60 கோடியை எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வழங்கியுள்ளதாக, இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்தியன் ஆயில் நிறுவன தமிழகம், புதுச்சேரி ஆயில் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ஜெயதேவன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கொரோனா வைரசை தடுக்க அரசுக்கு உதவும் வகையில், எண்ணெய் நிறுவன ஊழியர்கள் தங்களது இரண்டு நாள் சம்பளத்தை, அதாவது 60 கோடி பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர்.