சென்னை: தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடைக்கு முன்போ வெயிலின் கோரதாண்டவம் காரணமாக மதுரையில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. 6 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த பிறகு மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரையிலான கால கட்டத்தில் சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் 50 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 64 சதவீதம் குறைவு. இதற்கிடையே, பசிபிக் கடல் பகுதியில் நிலவும் எல்நினோ என்பது சற்று குறைந்து சமநிலையில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.