நாகை: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 50 பேர் நாகை ஆரியநாட்டுத்தெருவில் தங்கியுள்ளனர். இவர்கள் நாகையில் பல்வேறு பகுதிகளில் கரும்பு ஜீஸ், ஐஸ், குல்பிஐஸ், பானிபூரி வியாபாரம் செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக இவர்கள் வேலை இழந்து, உணவுக்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த 50 பேரும் நேற்று, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் சந்தித்து தங்களை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரிக்கை வைத்தனர்.